நெருக்கமாக நடிப்பது வெறும் நடிப்புதான்!!
தன்னுடைய அனுமதி இல்லாமல் தொப்புளை படம் பிடித்துவிட்டதாக இயக்குனர் சற்குணம் மீது ஆவேசமாக புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை நஸ்ரியா. இவர் சமீபத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியின் மகன் பஹத் பாசிலை திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பின்னர் தனது கணவர் மற்ற நடிகைகளிடம் நெருக்கமாக நடிப்பதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையாம்.
இதுகுறித்து பஹத்பாசில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியபோது, ‘சினிமாவில் நெருக்கமாக நடிப்பது வெறும் நடிப்புதான் என்று ஒரு நடிகையாக இருந்த அவருக்கு தெளிவாக தெரியும் என்பதால் எனக்கு அவர் எந்தவித கண்டிஷனும் போடவில்லை. என்னை அவர் முழுமையாக புரிந்து வைத்துள்ளார். இதனால் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் பஹத் பாசிலின் மார்கெட் குறைந்து போனதாக கூறப்படுவது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பஹத், எனக்கு என்னுடைய மார்க்கெட்டை விட நஸ்ரியாதான் முக்கியம் என்று கூறினார்.
Average Rating