35,000 சுற்றிவளைப்புக்கள் – சுமார் 90 மில்லியன் அபராதம்!!
Read Time:1 Minute, 8 Second
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 35,000 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இவற்றின் மூலம் 90 மில்லியனுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூபி மர்சுக் தெரிவித்துள்ளார்.
காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தல், நுகர்வுக்குத் தகுதியற்ற பொருட்களை விற்பனை செய்தல், காலாவதி திகதியை மாற்றியமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் விரிவான சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை கூறியுள்ளது.
Average Rating