பெஷாவர் பள்ளி தாக்குதலுக்கு திட்டமிட்டுத் தந்த முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டான்!!
Read Time:1 Minute, 14 Second
பெஷாவர் பள்ளிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை புகுந்த தலிபான் தீவிரவாதிகள் 132 மாணவ-மாணவிகள் உள்பட 150 பேரை கொன்று குவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக பாகிஸ்தானின் தரைப்படைகளும், விமானப்படைகளும் தலிபான்களின் பதுங்குமிடங்களின் மீது ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த வரிசையில், கைபர் பக்துங்க்வா மாகாணத்துக்குட்பட்ட ஜம்ருட் அருகே குந்தி பகுதியில் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சதாம் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டான்.
பெஷாவர் பள்ளி தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம் தீட்டித் தந்து, ஆயுதமேந்திய 7 தீவிரவாதிகள் பள்ளி வளாகத்தினுள் ஊடுருவுவதற்கு இவன் முக்கிய காரணமாக இருந்ததாக நம்பப்படுகின்றது.
Average Rating