வழுக்கைத் தலையில் முடி முளைக்க பசு மாட்டு சிறுநீர் குடிக்கும் வட இந்தியர்கள்!!
வட இந்தியாவில் சாலையில் பராமரிப்பின்றி அலையும் மாடுகளைப் பராமரித்து வரும் தொண்டு நிறுவனம் அந்த மாடுகளின் சிறுநீரிலிருந்து சுத்தம் செய்யும் பொருட்களை உருவாக்க இருக்கிறது. விரைவில் அது அரசாங்க அலுவலகங்களால் வாங்கி உபயோகப்படுத்தப்பட இருப்பதாக “புனித பசு அறக்கட்டளை”யைச் சேர்ந்த அனுராதா மோடி தெரிவித்துள்ளார். மேலும், முதலில் மாட்டின் சிறுநீரை வைத்து நாங்கள் பொருட்களை உருவாக்கும் போது யாரும் பயன்படுத்த விரும்பாத அளவுக்கு கடும் வாடை விசியது.
எனவே தற்போது சிறுநீரைக் காய்ச்சி வடிகட்டி, பைன் எண்ணெய் போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி அதன் துர்நாற்றத்தை மறைத்துள்ளதாகவும் இந்த பொருட்கள் சிறந்தவை என்று ஆய்வுக்கூட தர சோதனையில் சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
‘கௌனில்’ என்ற பெயருடன் வெளிவரும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் சிறுநீர் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள், சோப் மற்றும் ஒரு குளிர்பானம் கூட தயாரிக்கப்பட இருக்கிறது. ஆக்ரா உள்ளிட்ட பல வட இந்திய நகரங்களில், பசு மாட்டின் சிறுநீரை குடித்தால் புற்றுநோய், சர்க்கரை நோய், வயிற்று பிரச்சினை உட்பட பல நோய்கள் குணமாகும் என்று நம்பும் மக்கள் அதை மாட்டின் உடலிலிருந்து வெளியேறிய சூட்டில் குடிக்கின்றனர்.
வழுக்கைத் தலையில் முடி வளர இதுதான் சிறந்த மருந்து என்றும் சொல்கின்றனர். சமீபத்தில் இந்து மதத் தலைவர்களால் நடத்தப்படும் பிரச்சார கூட்டங்களால் பசுவின் சிறுநீர் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பலர் தெரிவிக்கின்றனர்.
Average Rating