கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் சடலம்
Read Time:1 Minute, 18 Second
வெலிகந்தை பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அருளய்யா மதி(30), அவரது மனைவி சுதா(25) என்பவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சடலங்கள் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை வெலிகந்தை சேனபுர காட்டுப்பகுதியில் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்று கிடப்பதாகத் பொதுமக்கள் தெரிவித்த தகவலையடுத்து சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டு வெலிகந்தை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருகோணமலை கட்டைப்பறிச்சானில் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பூர் கட்டைப்பறிச்சானைச் சேர்ந்த திருகோணமலை பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் செல்லையா வர்ணகுலசிஙகம்(55) என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.