பள்ளி ஆஸ்டலில் பிரசவித்த பத்தாம் வகுப்பு மாணவி: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!!
Read Time:57 Second
ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒரு குழந்தைக்கு தாயான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்தமால் மாவட்டத்தில் உள்ள லிங்ககடா உறைவிடப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்த அந்த மாணவி, அதே வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது அறையில் அந்தப் பெண் பிரசவித்ததாக கிடைத்த தகவலையடுத்து, பள்ளியின் தலைமையாசிரியை, இரு ஒப்பந்த ஆசிரியைகள், பள்ளி மருந்தக செவிலியர் ஆகியோரை பணி நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Average Rating