பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் வழிபட்டார் அஜீத்!!
நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள என்னை அறிந்தால் படம் வருகிற பெப்ரவரி 5ம் திகதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
கௌதம் மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அஜீத்துடன், த்ரிஷா, அனுஷ்க, அருண் விஜய் நடித்துள்ளனர். படத்திற்கு இரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுவிட்டன.
இந்நிலையில் படம் திரைக்குவருவதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜீத், தனது பெற்றோருடன் திருப்பதி சென்று வெங்கடாச்சலபதியை வழிப்பட்டார். இந்நிலையில் நேற்று கேரள மாநிலம் பாலக்காடு சென்று அங்குள்ள பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
சிறப்பு அர்ச்சசனை செய்து பிரார்த்தனை மேற்கொண்டார். அப்போது அஜீத் கோவிலுக்கு வந்துள்ளதையறித்து இரசிகர்கள் அவரை முற்றுகையிட்டு கைகுழுக்க்கினர். இதனைத்தொடர்ந்து பொலிஸார் அவரை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்
Average Rating