ரெயில் கழிவறைக்குள் தூக்கில் தொங்கிய வாலிபரின் பிணம்: கொலையா? தற்கொலையா?
அரியானா தலைநகர் சண்டிகரில் இருந்து குஜராத் தலைநகரான அகமதாபாத் வரை செல்லும் உன்ச்சஹார் எக்ஸ்பிரஸ் ரெயில் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகரை நேற்றிரவு நெருங்கியது. அப்போது அதில் பயணித்த ஒரு பெண் கழிவறைக்கு சென்றார்.
கதவு உள்புறம் தாழிடப்படிருந்ததையடுத்து, வெகுநேரம் காத்திருந்த அந்த பெண் கதவை தட்டிப்பார்த்தும் உள்ளே இருந்து குரல் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். கதவை உடைத்து திறந்த போலீசார் கழிவறையின் உள்ளே ஒரு துண்டு துணியில் தூக்கு மாட்டியபடி ஒரு வாலிபர் பிணமாக தொங்கிக்கொண்டிருப்பதை கண்டனர்.
பிணத்தை இறக்கி பரிசோதித்தபோது சட்டைப்பையில் இருந்த குறிப்புகளையடுத்து இறந்தவரின் பெயர் ஷியாம் லால்(30) என்பதும் பீகார் மாநிலத்தின் சம்ப்ரான் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அந்த முகவரியின் அடிப்படையில் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த ரெயில்வே போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இது கொலையா? தற்கொலையா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Average Rating