கோயம்பேட்டில் பிக்பாக்கெட் அடித்த வாலிபர் கைது!!
Read Time:1 Minute, 12 Second
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் திண்டிவனம் செல்ல தேவராஜ் என்பவர் 5–வது நடைமேடையில் நின்றிருந்தார். அப்போது அவரிடம் ஒரு வாலிபர் மணிபர்சை பிக்பாக்கெட் அடித்து விட்டு ஓடினார். அப்போது தேவராஜ் திருடன், திருடன் என்று கத்தினார்.
இந்த சம்பவத்தை பார்த்து ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் அரிக்குமார் திருடனை விரட்டியபடி ஓடினார். பஸ் நிலைய வாசல் வரை விடாமல் ஓடிச்சென்று திருடனை இன்ஸ்பெக்டர் அரிக்குமார் பிடித்தார்.
அவனிடம் இருந்த 3 பவுன் செயின், 9 ஆயிரம் பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார். இதில் அவனது பெயர் நாகராஜ் தெற்கு சிவன்கோவில் தெருவை சேர்ந்தவன் என்று தெரிய வந்தது. அவனிடம் இருந்த 3 பவுன் செயின் வேறொரு இடத்தில் திருடியதாக தெரிவித்தான்.
Average Rating