அரியலூர் அருகே ஆசைக்கு இணங்காத மருமகளை சரமாரியாக தாக்கிய மாமனார் கைது!!

Read Time:2 Minute, 28 Second

b63731b9-b5e9-48fc-aab9-062a14362987_S_secvpfஅரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேல மைக்கேல் பட்டியை சேர்ந்தவர் சவரிமுத்து (வயது 55), விவசாயி. இவரது மகன் அந்தோணிசாமி. இவரது மனைவி ஆரோக்கிய அமல் ராணி (30). இவர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

2 மகன்கள் உள்ள நிலையில் அந்தோணிசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சவரிமுத்து வீட்டில் ஆரோக்கிய அமல்ராணி மற்றும் குழந்தைகள் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் ஆரோக்கிய அமல்ராணி மீது தவறான கண்ணோட்டத்தை கொண்ட சவரிமுத்து அடிக்கடி அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதற்கு ஆரோக்கிய அமல்ராணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும் வெளியில் சொல்ல முடியாத நிலைமையிலும் அவர் தவித்து வந்துள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திய சவரிமுத்து தனது விருப்பத்தை நிறைவேற்ற ஆரோக்கிய அமல்ராணியை துன்புறுத்த தொடங்கினார்.

சம்பவத்தன்று வீட்டில் ஆரோக்கிய அமல்ராணி தனிமையில் இருந்தார். அப்போது வெளியில் சென்று வந்த சவரிமுத்து தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சவரிமுத்து உருட்டு கட்டையால் மருமகளை சரமாரியாக தாக்கினார்.

இதில் அவர் படுகாயம் அடைந்து ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக ஜெயங்கொண்டம் போலீசில் ஆரோக்கிய அமல்ராணி புகார் செய்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சப்–இன்ஸ்பெக்டர் காமராஜ் விசாரணை நடத்தி சவரிமுத்துவை கைது செய்தார்.

பின்னர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எமி ஜாக்சனின் கவர்ச்சி புகைபடங்கள்!!
Next post ஈரோட்டில் சொத்து தகராறில் அண்ணன் மகனை குத்திக் கொன்ற சித்தப்பா!!