குடி போதையில் வேகமாக ஓட்டிய கார் விபத்தில் சிக்கி தீக்கோளமாக மாறியது: 3 வாலிபர்கள் உடல் கருகி பலி!!
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மிதமிஞ்சிய குடி போதையில் சில வாலிபர்கள் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கி, தீக்கோளமாக மாறியதில் அதில் இருந்த 3 வாலிபர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
இங்குள்ள ரட்லம் மாவட்டத்தின் டோடார் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் மின்னல் வேகத்தில் சென்ற அந்த கார் எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது பயங்கர மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி குபீரென தீ பிடித்தது. சில வினாடிகளில் கார் முழுவதும் தீக்கோளமாக மாறியது.
தப்பியோடக்கூட முடியாத போதையில் உள்ளே சிக்கிக்கொண்ட நான்கு வாலிபர்களில் ராகேஷ், அருண், ரோஹித் ஆகியோர் அடையாளம் தெரியாத கரிக்கட்டைகளாக கருகி உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என கூறப்படுகின்றது. மீட்கப்பட்ட விகாஸ்(24) என்பவர் ரட்லம் அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Average Rating