கும்மிடிப்பூண்டி அருகே குழந்தையை கொன்று பெண் தற்கொலை!!
கும்மிடிப்பூண்டி அருகே தம்புரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். பூ வியாபாரி. இவர் தினமும் கும்மிடிப்பூண்டியில் இருந்து பூ எடுத்து வந்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார்.
இவரது மனைவி தேவி (25). இவர்களுக்கு ஜீவிதா (7), குமார் (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று கணவன்–மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. மனைவியை கண்டித்த சுரேஷ் வியாபாரத்துக்கு சென்றுவிட்டார். இதனால் வேதனை அடைந்த தேவி தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் குடித்தார்.
மயங்கி கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை தேவியும், ஜீவிதாவும் பரிதாபமாக இறந்தனர். குமார் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating