மேக் இன் இந்தியா: உலகின் மிகப்பெரிய 3-டி பிரிண்டிங் நிறுவனத்தின் தொழிற்சாலை இந்தியாவில் தொடக்கம்!!
பிரதமர் நரேந்திர மோடியின் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக உலகின் மிகப்பெரிய 3-டி பிரிண்டிங் நிறுவனம் இந்தியாவில் தனது தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களாக டிஸ்ட்ரிப்யூட்டர்கள் மூலமாக இந்தியாவில் தங்களது 3-டி பிரிண்டர்களை விற்று வந்த அமெரிக்காவைச் சேர்ந்த ’ஸ்ட்ரடசிஸ்’ நிறுவனம், முதற்கட்டமாக தனது முதல் ’3-டி பிரிண்டிங் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை’ (3D Printing Experience Centre) பெங்களூரில் தொடங்குகிறது. இந்த மையத்தில் 6 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட தங்களது அனைத்து வகையான 3டி பிரிண்டர்களையும் காட்சிக்கு வைக்கிறது.
இது குறித்து அந்நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய பொது மேலாளர் ஓமர் க்ரீகர் கூறுகையில்” இந்தியா வர்த்தகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடு. அடுத்த சில வருடங்களில் இங்கு எங்களது வர்த்தகத்தில் 50 சதவீத வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்’ தெரிவித்தார்.
Average Rating