கொடைக்கானல் அருகே மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது!!
கொடைக்கானல் அருகில் உள்ள பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் தேவி (வயது 14) (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). தேவி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். சேகர் வீட்டில் கழிப்பறை இல்லாததால் தேவி தினமும் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் கழிப்பறைக்கு செல்வது வழக்கம்.
அவருக்கு துணையாக கஸ்தூரிபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் மனைவி மேனகா (32) என்பவரும் சென்று வருவார்.
சம்பவத்தன்று பொதுக்கழிப்பறைக்கு தேவியுடன் மேனகா சென்றார். அப்போது அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி 2 வாலிபர்களுடன் அனுப்பி வைத்தார். அவர்கள் 2 பேரும் வேறொரு இடத்துக்கு அழைத்துச் சென்று தேவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தனர்.
நீண்ட நேரம் வீடு திரும்பாத தனது மகளைத் தேடி அவரது பெற்றோர் வந்தனர். இதையறிந்ததும் மேனகா செல்போன் மூலம் அவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து மாணவியை அங்கேயே விட்டு விட்டு அந்த வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து தேவி நடந்த விபரங்களை தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் இது குறித்து கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் மேனகாவை கைது செய்து விசாரணை நடத்தியதில் மாணவியிடம் உல்லாசமாக இருந்தது மதுரை மேல அண்ணாதோப்பு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் (34), அவரது நண்பரான மினி லாரி டிரைவர் சிவா என்ற சொக்கநாதன் என தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களையும் கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Average Rating