கருப்பு பணம்: இரு இந்திய பெண்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ் வங்கி!!
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிவைத்திருக்கும் இரு இந்திய பெண்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது அந்நாட்டின் மத்திய வரி நிர்வாக அமைப்பு.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் சாம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைப்பது வழக்கம். ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளின் எதிர்ப்பை அடுத்து, தங்கள் நாட்டில் சட்ட விரோதமாக கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுமார் 40 பேரின் பெயர் மற்றும் பிறந்த தேதியை வெளியிட்டுள்ளது சுவிஸ் மத்திய வரி நிர்வாக அமைப்பு. இதில் இந்தியாவை சேர்ந்த ஸ்னே லதா சாஹ்னி மற்றும் சங்கீதா சாஹ்னி என்ற இரு பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் அவர்களின் பிறந்த தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இருவரும், தங்களை பற்றி விவரங்களை இந்திய அரசிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என விரும்பினால் அடுத்த 30 நாட்களுக்குள்ளாக சுவிஸ் மத்திய நீதிமன்றத்தில் முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating