பெற்றோர் எதிர்ப்பு: போலீஸ்காரர்–காதலி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!!
Read Time:1 Minute, 10 Second
மதுரை யாகப்பா நகர் அப்பாஸ் தெருவை சேர்ந்தவர் பாலுசாமி மகன் நாகேந்திரன் (வயது24). இவர் மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சிவகங்கை மாவட்ட ஏனாதியை சேர்ந்தவர் சுகப்பிரியா (19) இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்களை கண்டித்தனர்.
இதனால் மனம் உடைந்த நாகேந்திரன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதேபோல் சுகப்பிரியாவும் தனது வீட்டில் விஷம் குடித்தார். அவர்கள் இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து மதுரை அண்ணாநகர் போலீசாரும், பூவந்தி போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating