அகதி போர்வையில் ஊடுருவிய விடுதலைப் புலி: சிறப்பு முகாமுக்கு மாற்றம்
அகதி போர்வையில் தமிழக எல்லைக்குள் ஊடுருவிய விடுதலைப்புலி, செல்கல்பட்டில் உள்ள போராளிகளுக்கான சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டார். இலங்கை நடந்துவரும் உள்நாட்டு சண்டையால் அங்கு நிம்மதியாக வாழமுடியாத தமிழர்கள், அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் அகதிகளோடு சேர்ந்து விடுதலைப் புலிகளும் தமிழகத்திற்குள் ஊடுருவி விடுகின்றனர். இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் அகதி போர்வையில் ஊடுருவி, மண்டபம் அகதிகள் முகாமில் அனுமதிக்கப்பட்டவர் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் என்பவரது மகன் ரெமோ. இவரிடம் நடத்திய விசாரணையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் செங்கல்பட்டில் உள்ள போராளிகளுக்கான சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த ஜனவதி மாதத்தில் இருந்து இதுபோல் அகதிகளாக ஊடுருவிய 39 பேர் சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.