ஒடிசாவில் பயங்கரம்: சொத்து தகராறில் தந்தை-மகன் தலை துண்டித்து படுகொலை!!
Read Time:1 Minute, 15 Second
ஒடிசாவில் உள்ள பலசோர் மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 65 வயது நபரும் அவரது 24 வயது மகனும் தலை துண்டித்த நிலையில் இன்று பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள சலாபனி பழங்குடியின பகுதியை சேர்ந்த சானியா சிங் (65) என்பவரும் அவரது மகனான பாபுலி சிங் (24) என்பவரும் இன்று காலை அவர்களது வீட்டில் தலையில்லாத பிணங்களாக கிடந்தனர்.
சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சொத்து தகராறில் உருவான பகையை மனதில் வைத்து அவரது எதிரிகள் நேற்று நள்ளிரவு வேளையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்து, கோடரியால் தலைகளை துண்டித்து கொன்றுவிட்டதாக கருதும் போலீசார், இந்த கொடூர படுகொலை தொடர்பாக ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating