விட்டுப் பிரிந்து சென்ற மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய வெறிபிடித்த முன்னாள் கணவன்!!
Read Time:1 Minute, 21 Second
சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்ட மனைவியை பழிவாங்குவதற்காக வெறி பிடித்த அவரது முன்னாள் கணவர் அந்தப் பெண் மீது ஆசிட் வீசியுள்ள சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலூர் கிராஸ் ரோட் என்ற பகுதியில் நேற்று 38 வயது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பலர் பதட்டத்துடன் ஓடி வந்தனர். அந்தப் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரித்த போது தனது முன்னாள் கணவர் காஜா ஹீசைன் தன் மீது இருந்த கோபத்தால் இப்படி செய்து விட்டதாக அவர் அழுதபடி புலம்பினார். ஹூசைன் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating