சட்டவிரோத பிரச்சாரம் – இரு வேட்பாளர்கள் கைது!!
Read Time:1 Minute, 5 Second
தேர்தல் சட்டங்களை மீறி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட புத்தளம் மாவட்டத்தின் இரு வேட்பாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பெரட்டுகாமி கட்சியைச் சேர்ந்த இவர்கள் அனுமதிப் பத்திரமின்றி ஒலிபெருக்கி இயந்திரங்களை பயன்படுத்தி லொரி ஒன்றில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வனாத்தவில்லு பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குறித்த லொரியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட வேட்பாளர்கள் இருவரும் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வனாதவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating