யார் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் – ததேகூ!!
புதிதாக எந்த அரசாங்கம் உருவாகினாலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எந்த அரசாங்கம் மத்தியில் ஆட்சி அமைத்தாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளக விசாரணைக்கா, சர்வதேச விசாரணைக்கா உந்துதலை கொடுக்கும் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சுமந்திரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆரம்ப காலம் முதல் சர்வதேச விசாரணை தான் நீதி விசாரணைக்கு உகந்ததென வலியுறுத்தி வருகின்றது. போரின் போது இரண்டு தரப்பினருக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு சாரார்களில் ஒருவர் மீது விசாரணை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. குறித்த இரண்டு தரப்பினரும் போர் புரிந்த தரப்பினர் என்ற வகையில் ஒரு தரப்பினர் மீது விசாரணை செய்ய முடியுமா? அதை யாரும் ஏற்றுக்கொள்வார்களா?.
பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்த வேண்டுமென்பதில் யாரும் மாற்றுக் கருத்து சொல்ல முடியாது. பக்கச்சார்பற்ற விசாரணையாக இருந்தால் அது சர்வதேச விசாரணையாக மட்டுமே இருக்க முடியும். இது அடிப்படையான விடயம் இதில் ஏன் ஐயப்பாடு எழுகின்றது என தெரியவில்லை.
ஒரு காலத்திலும் வித்தியாசமான கருத்து தெரிவிக்கவில்லை. சர்வதேச விசாரணை எதிர்மறையான விளைவுகளை கொண்டு வருமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.
சர்வதேச விசாரணை தான் வேண்டுமென முழுமையாக போராடிய எம்மைப் பார்த்து, சர்வதேச விசாரணையினை கைவிட்டு விட்டோம் என கூறுகின்றார்கள். எங்கே? எப்போது? சர்வதேச விசாரணை வேண்டாமென தெரிவித்துள்ளோம்?
சர்வதேச விசாரணையினை விட வேறு எதையும் ஆதரிப்போம் என எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவித்ததில்லை. நடைபெறவுள்ள தேர்தல் முடிந்த பின்னரும் சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாடு தொடரும். ஐயப்பாடு எழும்புவதாக தெரியவில்லை. சர்வதேச விசாரணை வேண்டாமென வலியுறுத்தியவர்களுக்கு அவ்வாறான பயம் ஏற்பட்டிருக்கலாம்.
சனல் 4 ஊடகத்தினால் ஐ.நா விசாரணை நீதியை வலியுறுத்துவது சந்தேகம் என கசியப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட செய்தி கசிந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கசிந்த ஆவணம் புனையப்பட்ட ஒரு ஆவணம்´ என்று சுமந்திரன் தெரிவித்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating