முன்னாள் புலி உறுப்பினர்கள் 10 பேரும் தோல்வி!!
Read Time:1 Minute, 0 Second
இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.
சுயேட்சைக் குழு இல.4ல் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட அவர்கள் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 1979 ஆகும்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 10 பேர் இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட எதிர்பார்த்திருந்த நிலையில் கூட்டமைப்பு அவர்களின் கோரிக்கையை நிராகரித்தமையினால் சுயேட்சையாக அவர்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating