முடிவுக்கு வந்தது எவன்காட் வழக்கு!!
Read Time:1 Minute, 4 Second
காலி துறைமுகத்தில் மீட்கப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் எவன்காட் (Avant Garde) நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நிறைவுக்கு கொண்டுவருமாறும் அவரது வெளிநாட்டு பயணத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாது என்று சட்டமா அதிபர் தெரிவித்ததாக இன்று நீதிமன்றத்தில் இரகசிய பொலிஸார், தெரிவித்தனர்.
இதனையடுத்தே நீதவான் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating