சுதுமலையில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் படுகாயம்…!!
Read Time:1 Minute, 6 Second
சுதுமலையில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு இளைஞர் படுகாயத்திறக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுதுமலை அம்மன் கோவில் பகுதியில் இரண்டு மோட்டார் சையிக்கிளில் வந்த நான்கு பேர் இந்த வாள் வெட்டை மேற்ககொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.
சுதுமலை வடக்கு சுதுமலையைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீகிருஸணகுமார் வயது 26 என்ற இளைஞரே வெட்டுக்காயத்திற்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையின் 24 ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
Average Rating