10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை..!!
Read Time:1 Minute, 17 Second
10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 07.30 முதல் அமுலுக்கு வரும் வகையில் 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நீடிக்கும் என தேசிய கட்ட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவு பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில வீதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Average Rating