அமெரிக்காவின் மியாமி கடற்பகுதியில் கடலுக்கு அடியில் கல்லறைகள் அமைப்பு

செய்திகள் No Comments »

அமெரிக்காவின் மியாமி கடற்பிராந்தியத்தில் கடலுக்கடியில் கல்லறைகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீ பிஸ்கேன் கடற்கரையிலிருந்து 3 மைல் தொலைவில் 45 அடி ஆழத்தில் இந்த கல்லறைத் தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. “த நெப்ரியூன் மெமோரியல் ரீப்” நிறுவனம் இந்தக் கல்லறைகளை அமைத்து வருகிறது. 16 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இத் தோட்டத்தில் 1 இலட்சத்து 25 ஆயிரம் கல்லறைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. “த நெப்ரியூன் மெமோரியல் ரீப்” நிறுவனத்தின் பங்குதாரரான ஆழ்கடல் நீச்சல் நிபுணரான கேரிலிவின் என்பவரின் யோசனையில் உதித்த இத்திட்டத்தில் முதற்கட்டமாக 850 கல்லறைகள் அமைக்கப்படவுள்ளன. இறந்தவர்களின் அஸ்தி கொண்டு வரப்பட்டு அவர்களது குடும்பத்தவர்களின் முன்னிலையில் அது சீமெந்துடன் கலக்கப்படுகிறது. பின்னர் அவர்களது விருப்பப்படி கல்லறை வடிவமைக்கப்பட்டு தாமிரம், வெண்கலத்தாலான வேலைப்பாடுகளுடன் கல்லறை அமைக்கப்படுகிறது. இறந்தவரின் பெயர், பிறந்த நாள், இறந்த நாள் போன்றவை பொறிக்கப்பட்டு பின் ஆழ்கடல் நீச்சல் வீரர்களால் இக்கல்லறை கடலுக்கடியில் கடற்பாறைகளுடன் இணைக்கப்படுகிறது. கல்லறையின் வடிவம், வேலைப்பாடுகள் என்பவற்றிற்கேற்ப 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் ரூபா வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான சீமெந்து பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படுகிறது.ஆழ்கடல் நீச்சல் வீரர்களுக்கு இந்தக் கல்லறைத் தோட்டத்தைப் பார்வையிடுவது பொழுது போக்காக அமைவதுடன், அவர்கள் கல்லறைத் தோட்டத்தில் விளையாடவும் நடனமாடவும் தனி இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக, கர்நாடக கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 54 ஆனது

செய்திகள் No Comments »

தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதி கிராமங்களில் நேற்று முன்தினம் விஷச் சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்ைக 54 ஆக உயர்ந்துள்ளது. பலர் கண்பார்வை இழந்துள்ளனர். இதுவரை இரு மாநிலங்களிலும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, ராயக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள ஆனேகல் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி கூலி வேலைக்குச் செல்வது வழக்கம். திங்கள்கிழமை வேலைக்குச் சென்று விட்டு வார இறுதி நாளான சனிக்கிழமையன்று சொந்த ஊர் திரும்புவார்கள். அதேபோல, தேன்கனிக்கோட்டையை அடுத்த பின்னமங்கலம், தேவகானப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு ஒரு வார வேலைக்கான கூலியைப் பெற்றுக் கொண்டு ஊர் திரும்பினர். வரும் வழியில் கர்நாடக மாநிலம் ஆனேகல் அருகே உள்ள சோலூர் என்ற இடத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர். பின்னர் ஊர் திரும்பினர். இந்த நிலையில் நேற்று காலை, பின்னமங்கலம், அடவிசாமிபுரம், தேவகானப்பள்ளி ஆகிய ஊர்களைச் சேர்ந்த, சாராயம் குடித்த தொழிலாளர்கள் படுக்கையிலேயே வாந்தி எடுத்து குடல் வெந்த நிலையில் பிணமாக கிடந்தார்கள்.

ஆதிரா உதடுகளை கடித்து சுவைத்துப் பார்த்த ரித்திக்!

செய்திகள் No Comments »

்பொதுவாக தமிழ் சினிமாவில் நிறைய ஹீரோக்கள் இருப்பது போலத் தெரியும். ஆனால் அவசரமாக ஒரு படம் தயாரிக்க வேண்டும், எந்த ஹீரோ கிடைப்பார் என்று தேடினால் ஒருவரும் கிடைக்க மாட்டார்கள். “அவர் அடுத்த இரண்டாண்டுகள் வரை பிஸி, இவர் தெலுங்கில் பிஸி, இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு கிட்டேயே வராதீர்கள்…” கொஞ்சம் பிரபலமாக இருக்கிற ஹீரோக்களைத் தேடிப்போனாலும் தயாரிப்பாளர்களுக்கு இப்படித்தான் பதில் கிடைக்கும். வேறு வழியில்லாமல் அடுத்த கட்ட முயற்சியில் இறங்குவார்கள். அதுதான் ஒரு நாயகனை புத்தம் புதிதாக உருவாக்குவது. அப்படி உருவாகியுள்ள புதிய கதாநாயகன் ரித்திக். ஆக்ஷன், ரொமான்ஸ் வேடங்களுக்கென்றே தயார் செய்யப்பட்ட மாதிரி அழகான உருவம். கல்லூரி மாணவிகளின் மனதைத் திருடும் துறுதுறுப்பு நிறைந்த இந்த இளைஞர், மாணவன் நினைத்தால் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே பாக்யராஜூடன் இணைந்து கலக்கியிருக்கிறாராம். இவருக்கு இந்தப் படத்தில் நாயகி, வர்ஷினி என்ற ஆதிரா. முதல் படத்திலேயே கதாநாயகியின் உதடுகளை கடித்து சுவைத்துப் பார்க்கும் அரிய வாய்ப்பையும் இயக்குநர் இந்த புதுமுகத்துக்கு வழங்கியிருக்கிறார் (’கடைசில அந்த சீன்களையெல்லாம் தூக்கிட்டாங்க சார்!’ என்கிறார் சற்றே சந்தோஷமான ஏமாற்றத்துடன்!).

* சீனாவில் சாதனை: விண்வெளி விதைகளால் பெரிய அளவில் காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்ய முடியும்

செய்திகள் No Comments »

விண்வெளி விதைகளை விதைத்து வழக்கத்தை விட மிகப்பெரிய அளவில் பூசணி, கத்தரிக்காய், கோவா போன்ற காய்கறிகளையும் தோடை, வாழை போன்ற பழங்களையும் சீன விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். மரபணுவில் மாற்றம் செய்து, விதைகளை உற்பத்தி செய்து, அவற்றை விண்வெளிக்கு அனுப்பி திரும்ப வரவழைத்து பூமியில் விதைத்தால் காய்கறிகள், பழங்கள் பல மடங்கு பெரிதாக வளர்க்க முடியும் என்று சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு ்சிசியான்ீ என்ற நவீன செயற்கைக் கோளை விண்வெளிக்கு சீனா அனுப்பியது. விண்ணில் ஏவினாலும் மீண்டும் அதை பூமிக்கு கொண்டு வர முடியும். இந்த செயற்கைக்கோளில் 2,000 விதைகள் அனுப்ப, விண்ணுக்கு சென்று மீண்டும் செய்கைக்கோள் திரும்பி பூமிக்கு கொண்டு வரப்பட்டது. அதில் வந்த விதைகளை விதைத்து விவசாயம் செய்ததில் காய்கறிகள், பழங்கள் பல மடங்கு பெரிதாக வளர்ந்தது. ஆளுயர முருங்கைக்காய் வளர்ந்தது. தெற்கு சீனாவில் உள்ள விவசாயிகள் இப்போது இந்த வகை விதைகளைத் தான் விதைத்து பயிர் செய்கின்றனர். விண்ணுக்கு அனுப்பி வரவழைக்கப்பட்ட விதைகளை ஆய்வு மையங்களில் பகுத்துணர்ந்து, அதை மரபியல் முறையில் விதைகளாக உருவாக்கி, அவை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்; `இயற்கையான முறையில் கிடைக்கும் விதைகளை பயிர் செய்வதை விட, இந்த விண்வெளி விதைகளை விதைத்து உற்பத்தி செய்தால் பல மடங்கு பெரிதான காய்கறி, பழங்கள் கிடைப்பது மட்டுமல்ல, அவற்றில் விட்டமின், கனிமச்சத்துக்கள் அதிகளவாக உள்ளன. மனிதர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது. சீன மக்கள் தொகை பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் உணவுத்தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த முறை உதவும்’ என்று தெரிவித்தனர்.

சுவிற்சர்லாந்தின் முன்னாள் விமானி பறவையாகப் பறந்து புதிய சாதனை

செய்திகள் No Comments »

சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த முன்னாள் விமானி ஒருவர் பறவையாக மாறி வானில் பறந்து சாதனை படைத்திருக்கிறார். எவ்ஸ் ரோஸி என்ற முன்னாள் விமானியே இவ்வாறு சாதனை படைத்தவராவார். நீண்ட காலமாக பறவைகளைப் போல் பறக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்த இவர், கடந்த 4 ஆண்டுகளாக இதற்கான இயந்திரங்களை வடிவமைப்பது தொடர்பாகவே சிந்தித்து வந்தார். இறுதியாக ஜெற் விமானங்களுக்குரிய எரிபொருளுடன் இயங்கும் நான்கு இயந்திரங்களை உருவாக்கினார். சிறிய விமான இறக்கையைத் தயாரித்து அதில் 4 இயந்திரங்களையும் இணைத்து அதை உடலில் பொருத்தி பரிசோதித்துப் பார்த்தார். அதில் அவருக்கு பறக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. பல்வேறு தடைகளைத் தாண்டி பறக்கும் முயற்சியில் வெற்றி பெற்றார். எனினும் இயந்திரத்திலிருந்து வெளியேறும் சூடான புகையின் வெப்பத்தை உடல் தாங்காது என்பதால் விண்வெளி வீரர்கள் அணியும் உடலைக் காக்கும் உடையும் அவருக்குத் தேவைப்பட்டது. தரையிலிருந்து மேலெழவும் கீழே இறங்கவும் பறவைகளுக்கு கால்கள் பயன்படுகின்றன. விமானங்களுக்கு சக்கரங்கள் பயன்படுகின்றன. ஆனால் இவையிரண்டும் இல்லாமல் செயற்பட முடியாது. இந்த இயந்திரங்களைப் பொருத்திக் கொண்டாலும் தரையிலிருந்து நேரடியாகப் பறக்க முடியாது என்பதை ரோஸி உணர்ந்தார். அதனால் வானத்திலிருந்து பறக்க முடிவு செய்தார். பறந்து கொண்டிருக்கும் விமானத்திலிருந்து குதித்து தரைக்கு மேலே 8 ஆயிரத்து 200 அடி உயரத்தில் மணிக்கு 186 கிலோமீற்றர் வேகத்தில் பறந்த இவர் கைகளை அசைப்பதன் மூலம் பறக்கும் திசைகளை மாற்றி 360 பாகையில் நாலாபுறமும் பறந்து சாதனை புரிந்தார். தரையில் இறங்குவதற்கு பரசூட்டை பயன்படுத்தினார்.

பிரிட்டனில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மிஸ் பிரிட்டன் ஜெம்மா கரேட் போட்டி

செய்திகள் No Comments »

பிரிட்டனில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் `மிஸ் பிரிட்டன்’ பட்டத்தினை வென்ற அந்நாட்டு அழகி ஜெம்மா கரேட் போட்டியிடுகின்றார். இதனால் அந்நாட்டு பிரதமர் கோர்டன் பிறவுணுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் தொழிலாளர் கட்சி அரசில் பிரதமராக கோர்டன் பிறவுண் இருந்து வருவதுடன் அண்மையில் அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவரது கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளதால் கோர்டன் பிறவுண் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். பிரிட்டன் பாராளுமன்றில் பிரதிநிதிகள் சபையில் தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கைனித் டன்வூடி மரணமடைந்ததால் கிரிவி மற்றும் நொன்விச் தொகுதியில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடைபெறவுள்ள இத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வேட்பாளருக்கு எதிராக மிஸ் பிரிட்டன் ஜெம்மா கரேட் போட்டியிடுகின்றார். இத்தேர்தலிலும் தொழிலாளர் கட்சி தோல்வியைச் சந்தித்தால் பிரதமர் கோர்டன் பிறவுணுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதால் அவர் கவலையில் ஆழ்ந்துள்ளார். அத்துடன் பிரிட்டன் இடைத்தேர்தலில் அழகி போட்டியிடுவதும் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் கிட்லரின் சித்திரவதைகளை வென்ற கொடூரம் வடமராட்சி கரவெட்டியில்… செல்வி மகேஸ்வரியின் படுகொலைச் சம்பவத்தின் போது புலிகளால் நடாத்தப்பட்ட அராஐகத் தாண்டவம்!!

செய்திகள் No Comments »

பெண்மைக்கெதிராக தமது கோரங்களை பேராசிரியர் ரஜணி திரணகமவில் தொடங்கிய புலிப்பாசிசம் மனித உரிமைவாதியும் முதல் நிலை பெண்ணியல் வாதியுமான செல்வி மகேஸ்வரி அவர்களை கொலை செய்ததுடன் பெண்மையை கொச்சைப்படுத்தி கொண்டே செல்கின்றது. கடந்த 13 ஆம் திகதி மாலை நேரம் அது, செல்வி மகேஸ்வரியின் தாயார் மரண படுக்கையில் கிடக்கின்றார், அவரது இறுதி கடமைகளை முடிப்பதற்காக வீட்டில் குடும்ப அங்கத்தினர் அனைவரும் ஒன்று கூடி இருக்கின்றனர். மாலை 6.30 மணியளவில் சந்தேகத்துக்கிடமான முறையில் சிலர் நடமாடித் திரிவதை செல்வி.மகேஸ்வரி அவர்களும் அவர்களும் அவரது குடும்பத்தினரும் கண்ணுற்று உரிய இடத்திற்கு தெரியப்படுத்த முயன்ற போதிலும் தொடர்புகள் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. பின் மாலை 07.20 மணி வீட்டின் படலையை திறந்தவாறு இராணுவ சீருடையை ஒத்த சீருடையணிந்த மூன்று ஆயுததாரிகள் (புலிகள்) உள்ளே நுழைந்தனர். வீட்டினுள் நுழைந்த ஆயுததாரிகள் யார் மகேஸ்வரி? என வினவ, உடனேயே முன்னே வந்த மகேஸ்வரி அவர்கள் நான்தான் என தன்னை அடையாளம் காட்டியுள்ளார். ஓரு ஆயுததாரி மகேஸ்வரியை நெருங்கிச் செல்ல மற்றைய இருவரும் வீட்டில் உள்ள அனைவரையும் தமது ஆயுத கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து ‘எவரும் தொலைபேசி அழைப்புகள் எதுவும் மேற்கொள்ள கூடாதென்றும் எவ்வித சத்தங்களையும் எழுப்பக் கூடாதென்றும்” கூறி முடிக்க மகேஸ்வரியை நெருங்கியவர் தனது கைத் துப்பாக்கியினால் செல்வி மகேஸ்வரியின் நெற்றியில் சுட மகேஸ்வரி அவர்கள் மல்லாக்க பார்த்தவாறே பின்புறமாக சரிந்து விழுந்துள்ளார். அவ்வாறு சரிந்து விழுந்த அவரின் உயிர் பிரிவதற்கு முன்பதாக கிழே விழுந்த அவரின் இரு மார்பகங்களிலும் குறிபார்த்து சுட்ட ஆயததாரி அவரது கீழ் பாவாடையை உயர்த்தி அவரது அந்தரங்க பெண்ணுறுப்பிலும் மூன்று வேட்டுக்களை தீர்த்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இவை செல்வி மகேஸ்வரியின் தாயார் இரு சகோதரங்களின் கண்ணெதிரேலேயே நடைபெற்றது கொடுமையிலும் கொடுமை!!

நட்பை கைவிட நெருக்குதல் - இரு தோழிகள் தற்கொலை!

செய்திகள் No Comments »

தங்களது நட்பைக் கைவிட குடும்பத்தினர் நெருக்குதல் கொடுத்ததால் மனம் உடைந்த இரு தோழிகள் நள்ளிரவில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டனர். சென்னையைச் சேர்ந்தவர் கிறிஸ்டி (35). அவர் வசித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி (36). இருவரும் சிறு வயது முதல் நெருங்கிய தோழிகள். எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள், எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். இவர்களது நெருங்கிய நட்பைப் பார்த்து அப்பகுதியினர் வியந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் திருமணமானது. கிறிஸ்டி, கே.கே.நகரைச் சேர்ந்த சின்னப்பராஜ் என்பவரைக் கல்யாணம் செய்து கொண்டார். மோகன் என்பவருடன் ருக்மணிக்கு திருமணம் நடந்தது. திருமண பந்தம் வந்த பிறகும் கூட நட்பு வளையத்திலிருந்து ருக்மணியும், கிறிஸ்டியும் வெளியேற விரும்பவில்லை. முன்பு போலவே இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இது சின்னப்பராஜ், மோகன் குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. இந்த நட்பு சரியல்ல, கைவிட்டு விடுங்கள், இருவரும் இனிமேல் சந்திக்கவே கூடாது என்று தடை விதித்தனர். இருந்தாலும் தடையை மீறி அவ்வப்போது இரு தோழிகளும் சந்தித்து வந்தனர். இதனால் இருவரது குடும்பத்திலும் பிரச்சினைகள் எழுந்தன. ஆனால் அதையும் தாண்டி தங்களது நட்பைப் பேணிக் காத்து வந்தனர் ருக்மணியும், கிறிஸ்டியும். இந்த நிலையில், கடந்த வாரம் ருக்மணி தனது சகோதரி பத்மாவதியின் வீட்டுக்குப் போனார். பின்னர் அங்கிருந்து நேராக கிறிஸ்டி வீட்டுக்குப் போய் விட்டார்.

கிழக்கு மகாண சபைக்கான தில்லுமுல்லு தேர்தலும்! வடக்கில் நடாத்தபடும் கொலைக்கான அரசின் அங்கிகாரமும்!

செய்திகள் No Comments »

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஜனாதிபதி ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஸ எல உறுமய அமைச்சர் சம்பிக்க ரணவக்க புலனாய்வு துறையினர் ஆகியோர் இணைந்து தீட்டிய சதித் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்துள்ளனர். பிள்ளையான் ஐயா கொசுரு ஞானம் குமாரதுரை தாத்தா. அதன்படி கள்ள வாக்குகளும் வன்முறைகளும் நிறைந்த தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கிழக்கு மாகாண சபை தேர்தலில் அதிக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வெற்றி பெறுவதை கட்டுப்படுத்தி அதன் ஊடாக தமிழர்களின் பெரும்பான்மையை குறைப்பதும் தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களை குடியேற்றுவது தொடர்பான திட்டம் அரசு தரப்பினரால் தீட்டப்பட்டது. இதன் அடிப்படையில் முதல் கட்டமாக தமிழர் விடுதலை கூட்டணி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகள இணைந்த கூட்டான தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணியை அம்பாறை மாவட்ட தேர்தலில் போட்டியிட வேண்டாம் என ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் ஒருவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

செய்திகள் No Comments »

nitphotosnews1.gif நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான, பயனுள்ள புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் எமக்கு (நிதர்சனம்.நெற் இணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு) அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி…. editor.nitharsanam@gmail.com

கிழக்கு மாகாண சபைக்கு ஆதரவளிப்பதாக தமிழ்க் கட்சிகள் (தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி, ஈ.பி.டி.பி மற்றும் ஈரோஸ்) உறுதிமொழி

செய்திகள் 1 Comment »

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் அரசியல் கட்சிகள், கிழக்கிலுள்ள சகல சமூகங்களினதும் ஐக்கியத்திற்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும், பிராந்தியத்தின் அபிவிருத்திக்காகவும் முதலமைச்சர் பிள்ளையானுடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் எனும் ஜனாதிபதியின் அழைப்பிற்கு சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளன. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் ஜனநாயக தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி, ஈ.பி.டி.பி மற்றும் ஈழவர் ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் தலைவர்களே பிள்ளையான் தலைமையிலான கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக உறுதிமொழியளித்துள்ளனர். பிள்ளையானை முதலமைச்சராக நியமிப்பதென்ற ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்தின் மூலம் முரண்பாடானதொரு சூழ்நிலைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபையானது கிழக்கிலுள்ள தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் மீண்டும் சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதற்கான எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது என ஈ.பி.டி.பியின் தலைவரும், சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முதலமைச்சராக பிள்ளையானை நியமிப்பதென்ற ஜனாதிபதியின் இந்தத் தீர்மானமானது சூழ்நிலைக்கேற்றவாறு புத்திசாலித்தனமானது எனவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

லோக்சபா சானலில் ஆபாச காட்சிகள் - மக்கள் முகம் சுளிப்பு

செய்திகள் No Comments »

மத்திய அரசின், லோச்சபா டிவி சேனலில் பாலியல் காட்சிகள் தாராளமாக காட்டப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வசதியாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை ஆரம்பித்த சேனல்தான் லோக்சபா சானல். இதில் லோக்சபா நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதுதவிர விவாதங்கள், பேட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன. தற்போது இந்த சேனலில் திரைப்படங்களும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. பாடல் காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. சில தினங்களுக்கு முன்பு இரவில் அந்த சேனலில் ஒளிபரப்பான ஒரு படத்தில் பாலுணர்வைத் தூண்டும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பினர். அரை நிர்வாண கோலத்தில் ஒரு ஆணும், பெண்ணும் படுக்கையில் இருப்பது போன்ற அந்தக் காட்சி குடும்பத்துடன் டிவி பார்ப்பவர்களை நெளிய வைத்தது. தனியார் சேனல்கல்கள் தான் நேயர்களை கவரவும், விளம்பர படங்கள் மக்களை சென்றடையவும் பாலுணர்வு தூண்டும் வகையில் காட்சிகள் அமைப்பது வழக்கம். ஆனால் பாரம்பரியம் மிக்க லோக் சபா பெயரில் ஒளிபரப்படும் சேனலிலும் இந்த நிலை தானா என்று பொது மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இந்தியாவில் இருந்து சென்ற சரக்கு கப்பல் சோமாலியா அருகே கடத்தல்

செய்திகள் No Comments »

இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் டன் சர்க்கரை ஏற்றிக் கொண்டு ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சோமாலியா நாட்டுக்கு ஒரு சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. “தி விக்டோரியா’ என்ற இந்த கப்பல் ஐக்கிய அரபு நாட்டு நிறுவனத்துக்கு சொந்த மானது. கப்பலில் 12 ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் இந்தியா, பாகிஸ்தான், டாக்கா தேசத்தை சேர்ந்தவர்கள். 4 ஆயிரம் டன் சர்க்கரையையும் டென்மார்க் நாடு இந்தியாவில் இருந்து வாங்கி சோமாலியாவுக்கு இலவசமாக வழங்கியது. அதைத்தான் இந்த கப்பல் ஏற்றி சென்றது. சோமாலியா அருகே உள்ள மொகா திசு துறைமுகம் அருகே கப்பல் சென்ற போது கடற் கொள்ளைகாரர்கள் கப்பலை மடக்கி கடத்தி சென்றனர். கப்பல் இப்போது எங்கு இருக்கிறது என்று தெரிய வில்லை, சோமாலியா அரசு கப்பலை மீட்க முயற்சி எடுத்து வருகிறது. சோமாலியா கடற்பகுதியில் கடற் கொள்ளையர்கள் அடிக்கடி சர்வதேச கப்பல்களை கடத்தி பணம் பறித்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டுமே இது வரை 12 கப்பல்களை கடத்தி சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்த ஒரு குழந்தையும் நிலநடுக்கத்தில் பலி: சீனாவில் பெற்றோர்கள் பரிதவிப்பு

செய்திகள் No Comments »

சீனாவில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தங்களின் ஒரே குழந்தையை ஏராளமான பெற்றோர்கள் பறிகொடுத்துள்ளனர். சீனாவில் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு குழந்தை திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் படி சீன தம்பதிகள் பலர் ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக்கொண்டனர். சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான பெற்றோர்கள் தங்களில் ஒரு குழந்தையும் இழந்து பரிதவிக்கின்றனர். இதற்கு உதராணமாக நிலநடுக்கத்தில் தனது குழந்தையை இழந்து தவிக்கும் பீ கெவீ என்பரது பேட்டியை சீன பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் கெவீயும் அவரது மனைவியும் ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக் கொண்ட பின் அரசின் ஒரு குழந்தை திட்டத்தை கடைபிடித்து வேறு குழந்தைகள் பெற்றுக் கொள்ளவில்லை. தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில், பள்ளி சென்றிருந்த அவரது மகள் யுக்ஸ்சிங் (13) பலியானார். “எங்கள் வாழ்க்கையின் ஒரே அர்த்தமாக எனது குழந்தையை நினைத்திருந்தோம், அவளது இழப்பு வாழ்க்கையில் நிரந்தரமான வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது’ என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார். இவர் மட்டும் இன்றி ஏராளமான சீனர்கள் தங்கள் குழந்தைகளை நிலநடுக்கத்திற்கு பறி கொடுத்துள்ளனர் என்று அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய சீனாவில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட சிறார்கள் உயிரிழந்தனர். இவர்களின் பெரும்பாலானவர்கள் தங்கள் பெற்றோருக்கு ஒரே குழந்தை. சீனாவில் அதிகரித்து வரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 1970-ல் ஒரு குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

விடுதலைப்புலிகளை ஒடுக்க இந்தியாவும் உதவுகிறது -இலங்கை பிரதமர் தகவல்

செய்திகள் No Comments »

இலங்கை பிரதமர் விக்ரமநாயகா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதா வது:- விடுதலைப்புலிகளை ஒடுக்குவதில் இந்தியாவும் எங்களுக்கு உதவியாக உள்ளது. அவர்களின் ஆசிர்வாதத்துடன் விரைவில் விடுதலைப் புலிகளை ஒளிப்போம். இலங்கையில் இனப் பிரச்சினை எதுவும் இல்லை. பயங்கரவாத பிரச் சினை எதுவும் இல்லை. இனப்பிரச்சினை இருந்தால் கொழும்பில் வெல்வெட்டி வரையிலும் தமிழர்கள் எப்படி சுதந்திரமாக நட மாடமுடியும். இலங்கையில் நிலவும் பயங்கரவாத பிரச்சினையை நாம் முறியடிப்போம். விடு தலைப்புலிகளை நிச்சயம் போரில் வெல்வோம் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. இந்த வெற்றி கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தான் இருக்கிறது. ஆனாலும் காலக்கெடு எதுவும் சொல்ல முடியாது. பிரபாகரனுக்கு கடந்த 30 ஆண்டுகளாக நல்லகாலம் இருந்தது இப்போது அவருக்கு கெட்டகாலம் ஆரம்பித்து விட்டது. தினமும் 40 விடுதலைப்புலிகள் வரை கொல்லப்படுகிறார்கள். நாம் இப்போது நவீன ஆயுதங்களை பயன்படுத்தி வருகிறோம். 4 பக்கமும் அவர்களுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டள்ளது. தமிழ் ஈழம் ஒரு போதும் உருவாகாது. உலகில் நாளையே 15 புதிய நாடுகள் உருவாகலாம். ஆனால் தனி ஈழம் உருவாக விடமாட்டோம். என்ன விலை கொடுத்தேனும் தடுத்து நிறுத்துவோம். விடுதலைப்புலிகளுக் கான எதிரான யுத்தத்தை ஒரு போதும் நிறுத்தமாட்டோம். புலிகள் ஆயுதங்களை கைவிட்டு வந்தால் அவர் களுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in