சிறுமி பலாத்கார வழக்கில் தாத்தா, பாட்டி உடந்தை? தேடுதல் வேட்டையில் பொலிசார்…!!
சிவகங்கையை சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் அவரது தாத்தா, பாட்டியை சிபிசிஐடி பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தந்தை, சகோதரர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர் உட்பட 10 பேர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி, தான் பெரும்பாலான நாள்கள் தாத்தா பாலுச்சாமி, பாட்டி லட்சுமி மற்றும் அத்தை செல்வி ஆகியோரது பராமரிப்பில் இருந்ததாகவும், அந்த சமயத்தில் தான் பலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் நீதிமன்றத்தில் வாக்குமூலம்அளித்திருந்தார்.
இந்நிலையில் ஏன் அவரின் தாத்தா, பாட்டி இது பற்றி புகார் ஏதும் தெரிவிக்கவில்லை என்ற சந்தேகம் பொலிசாருக்கு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து விசாரிக்க சிபிசிஐடி பொலிசார் அவர்களை தேடி சென்ற போது அவர்கள் அங்கு இல்லை.
இதற்கிடையில் அவர்கள் திருப்பூரில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சிபிசிஐடி தனிப்படை பொலிசார் திருப்பூர் விரைந்துள்ளனர்.
Average Rating