நள்ளிரவில் அலைந்து திரிந்த சிறுவன்: தெருவீதியில் படுத்துறங்கிய பெற்றோர்…!!

Read Time:2 Minute, 18 Second

homeless_family_002வீதியில் அலைந்து திரிந்த 2 வயது சிறுவனை மீட்ட பொலிசார், தங்க இடம் இன்றி தெருவில் படுத்துறங்கிய அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா நகரத்தில் Angelique Roland மற்றும் Michael Jones குடும்பம் தங்களது சிறு வயது குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள Fairmount பூங்காவில் படுத்துறங்கியுள்ளது.

ஆதரவற்றவர்களுக்கான இல்லத்தில் இரவு தங்க இடம் கிடைக்காமல், விடுதியில் தங்க வாடகை பணமும் இல்லாததால் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் அட்டை பெட்டியால் செய்த அறையில் தூங்கியுள்ளனர்.

இந்நிலையில் skateboard பயன்படுதுவோர் அப்பகுதியில் விளையாடுவதைக்கண்ட அவர்களது 2 வயது சிறுவன், பெற்றோரை விட்டு அந்த Skateboard பயன்படுத்துவோர் பின்னாலே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சிறுவனை மீட்ட ஃபிலடெல்ஃபியா போக்குவரத்து துறை அதிகாரிகள், அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அவனை ஒப்படைத்துள்ளனர்.

தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என Roland குடும்பத்தினர் பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். பொலிசாரின் உதவியுடன் மருத்துவமனையில் இருந்த சிறுவனை பெற்றோர் இறுதியில் கண்டு பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த செய்தி வெளியானதும், ஆதரவற்ற Roland குடும்பத்தினருக்கு உதவ பலர் முன்வந்துள்ளனர். மேலும், பலர் வேலை தருவதாகவும் கூறி தொடர்பு கொண்டுள்ளனர்.

இதனிடையே தொண்டு நிறுவனம் ஒன்று Roland குடும்பத்தினர் சிரம்மின்றி வாழ்க்கை நடத்தும் பொருட்டு 12 ஆயிரம் டொலர்கள் நிதி திரட்டும் பணியை துவங்கியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோபத்தின் உச்சக்கட்டம்: விமானத்தில் சகபயணியை கடித்துக்கொலை செய்த பெண்ணின் வெறிச்செயல்…!!
Next post பச்சிளம் குழந்தைகள் 2 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: பெற்றோர் கவலைக்கிடம்…!!