சொத்துக்காக கூலிப்படையை ஏவி தந்தையை கொன்ற மகன்: 4 பேர் கைது…!!

Read Time:3 Minute, 40 Second

2a872fbf-d920-4a14-8c1c-a6ade942a00f_S_secvpfதிருப்பூர் சுகுமார் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 51). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

பழனிவேலின் மனைவி இறந்து விட்டார். அதன் பின்னர் அலமேலு என்ற பெண்ணுடன் வசித்து வந்தார். பழனிவேலுக்கு திருவண்ணாமலையில் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் வீடு உள்ளது.

இந்த நிலம் மற்றும் வீட்டை தங்களுக்கு பிரித்து தருமாறு மகன், மகள்கள் பழனிவேலிடம் கேட்டனர். ஆனால் பழனிவேல் ‘எனது சொத்துக்கள் மற்றும் பணம் எல்லாம் அலமேலுவுக்குத் தான்’ என்று கூறிவிட்டார்.

இதனால் பழனிவேல் மீது மகன் மற்றும் மகள்கள் மிகவும் ஆத்திரமாக இருந்தனர். இந்த நிலையில் பழனிவேலின் மகனான நாகசெல்வம் தனது தந்தையிடம் சொத்துக்கள் மற்றும் பணத்தை பிரித்து தருமாறு கேட்டார்.

ஆனால் அவர் தரமுடியாது என மறுத்து விட்டார். இதனால் நாகசெல்வம் தனது தந்தையை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதுகுறித்த தனது நண்பர்களிடம் ஆலோசித்தார். அவர்கள் கூறியபடி மதுரையைச் சேர்ந்த கூலிப்படையினரிடம் ரூ.80 ஆயிரம் பேரம் பேசி 4 பேரை திருப்பூருக்கு வரவழைத்தார்.

அவர்கள் திருப்பூரில் கடந்த 1 வாரமாக தங்கியிருந்து பழனிவேலின் நடமாட்டத்தை கண்காணித்தனர். நேற்று இரவு பழனிவேல் வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பினார்.

நொய்யல் ஆற்றங்கரையில் சென்று கொண்டிருந்த அவரை வழமறித்த கூலிப்படை சரமாரியாக குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது.

பழனிவேல் கொலை குறித்து திருப்பூர் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அதிரடி விசாரணை மேற்கொண்டு நாகசெல்வத்தை கைது செய்தனர். விசாரணையில் அவர் ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்காக கூலிப்படையை ஏவி தனது தந்தையை தீர்த்துக்கட்டியதை ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் தென்னம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.1 கோடி சொத்துக்காக தந்தையை மகனே கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கபெருமாள்கோவில் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு…!!
Next post கொலை வழக்கில் கைதான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: சப்–இன்ஸ்பெக்டர்– 2 போலீசார் கைது…!!