கழுத்து வெட்டப்பட்டு பெண்ணொருவர் கொலை..!!
Read Time:1 Minute, 24 Second
மொரவக்கை, போருபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் பெண்ணொருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
56 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் பாடசாலை வேன் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும், சம்பவ தினத்தன்று குறித்த பெண் இடையில் அவசரமாக வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற வேளை குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பெண் வீட்டிற்குள் செல்ல முற்பட்ட வேளை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், வீட்டுக் கூரையின் ஓடுகள் சில அகற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
Average Rating