கால்கள் உடைக்கப்பட்டு பிணமாக தொங்கிய தலித் சிறுவன்: மற்றொரு பயங்கரம்…!!
ஹரியானா மாநிலத்தில் தலித் சிறுவர்கள் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளான்.
ஹரியானாவின் கோகனா பகுதியை சேர்ந்த கோவிந்த் என்ற சிறுவன் மீது, புறா திருடியதாக உயர் சாதியினர் பொலிசில் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கோவிந்தனை கைது செய்த பொலிசார் அடித்து உதைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த கோவிந்தனின் தாயார் தனது மகனை விட்டுவிடும்படி கெஞ்சவே, 10 ஆயிரம் ரூபாய் தந்தால் விடுவதாக கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தனது மகனுக்கு 10 ஆயிரம் கடன் வாங்கி வந்த போது, பொலிஸ் நிலையத்தில் கோவிந்தன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அவன் தப்பி ஓடி விட்டதாக பொலிசார் கூறி னார்கள், இரவு முழுவதும் தேடியும் கோவிந்த் எங்கு சென்றான் என்பது மர்மமாக இருந்தது.
இந்நிலையில் மறுநாள் காலை கோவிந்த் தன் வீட்டுக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தான்.
அவன் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன, 2 கால்களும் உடைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து கோவிந்த் உடலை மீட்ட அவன் உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உடலை வைத்து போராட்டம் நடத்தினார்கள்.
இதனையடுத்து விசாரணை நடத்த ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Average Rating