குடியாத்தத்தில் மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுமி பலி…!!
குடியாத்தம் பிச்சனூர் நரிமுருகப்ப முதலி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். லுங்கி மண்டி உரிமையாளர். இவரது மனைவி ஜெயபிரியா. இவர்களுக்கு குருகணேசன்(12) என்ற மகனும், ஆர்த்தி (9) என்ற மகளும் இருந்தனர்.
குருகணேசன் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் ஆர்த்தி 4ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ஆர்த்திக்கு திடீரென உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் பெற்றோர் குடியாத்தத்தில் உள்ள ஒரு டாக்டரிடம் ஆர்த்தியை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமி ஆர்த்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதற்கிடையில் ஆர்த்தியின் உடல்நிலை நேற்று மிகவும் மோசமானது. இதனால் திகைத்த பெற்றோர் குழந்தையை மீட்டு வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ஆர்த்தி நள்ளிரவு 11.30 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தாள். மர்ம காய்ச்சலில் 9 வயது சிறுமி பலியான சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.
Average Rating