கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து 5 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி…!!
Read Time:1 Minute, 22 Second
உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் டிராக்டர் டிரெய்லர் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் இறந்தனர்.
டிரைகோனியா மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் துர்கா பூஜையை முன்னிட்டு வழிபாடு செய்த சிலைகளை நேற்று மாலை கரைத்துவிட்டு இரவில் டிராக்டரில் ஊருக்கு வந்துகொண்டிருந்தனர். 32 பேர் அதில் பயணம் செய்தனர். பேலா கிராமத்தின் அருகே கர்ஜார் வாய்க்கால் பாலத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த டிராக்டர், கால்வாய்க்குள் விழுந்தது.
இதில், டிராக்டரில் இருந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். 5 குழந்தைகள் உள்பட 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 17 பேரைக் காணவில்லை. 5 பேரை உள்ளூரைச் சேர்ந்தவர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
Average Rating