தசரா கொண்டாட்டம் முடிந்து விடு திரும்பிய சிறுமி கற்பழித்து கொலை…!!
புதுடெல்லி-அரியானா எல்லை அருகில் தசரா கொண்டாட்டத்தை கண்டுகளித்து வீடு திரும்பிய 14 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியின் நரேலா பகுதியில் நடைபெற்ற தசரா விழாவை காண வந்திருந்த அந்த சிறுமி, விழா முடிந்ததும் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சிறுமியை, குண்ட்லி பகுதியில் வைத்து ஒரு கும்பல் வழிமறித்து ஆட்டோவில் கடத்திச் சென்றது.
இதனைப் பார்த்து பதறிப்போன அவரது தாயார், அந்த ஆட்டோவை துரத்திச் சென்றுள்ளார். ஆனால், அவரால் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, சிறுமியைத் தேடி வந்த நிலையில், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தாள்.
அவரை ஆட்டோவில் கடத்திச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல், கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating