தம்புள்ளை பஸ் விபத்தில் 35 பேர் காயம்..!!

Read Time:1 Minute, 45 Second

downloadதம்புள்ளை, இனாமலுவ பிரதேசத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 2.25 மணியளவில் தனியார் பஸ் ஒன்றும் லொரியொன்றும் மோதியதினாலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த பஸ்ஸில் பயணித்த 35 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் 25 பேர் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறு காயங்களுக்குள்ளானவர்கள் சிகிச்சை பெற்றுகொள்ளாமல் வேறு வாகனங்களில் சென்றுள்ளனர்.

பொலன்னறுவை, சிறிபுரவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் வண்டியுடன் சீமெந்து ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி பயணித்த லொரியின் பின் பக்கத்தில் மோதியதினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

லொரியின் விளக்கு இல்லாமையாலே மோதுண்டதாக பஸ் வண்டியின் சாரதி குறிப்பிட்டுள்ளார்.

தான் லொரியின் சக்கரங்களை சரி பார்ப்பதற்காக பிரதான வீதிக்கு பயணித்து கொண்டிருக்கும் போதே குறித்த பஸ் மோதியதாக லொரியின் சாரதி குறிப்பிட்டுள்ளார்.

சிகிரியா பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெரியப்பாவை திருமணம் செய்ய ஒற்றைக்காலில் நிற்கும் 17 வயது சிங்கள யுவதி..!!
Next post வவுனியா வடக்கில் இந்திய வீட்டுத்திட்ட வீடுகள்; விற்பனை மோசடி அம்பலம்… (இது எப்படி இருக்கு?) (வீடியோ)