பாம்பு விஷ முறியடிப்பு மருந்து கண்டுபிடிப்பு…!!
Read Time:1 Minute, 9 Second
நான்கு வருட ஆய்வின் அடிப்படையில் பாம்பின் விசத்தை முறியடிக்கும் மருந்து ஒன்றை பேராதனை பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.
அதன் வைத்திய பீடத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளர் இந்திய கவரம்மான உள்ளிட்ட ஆய்வு குழுவினர் இந்து ஆய்வை மேற்கொண்டு, மருந்தை கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் பாம்பு தீண்;டலுக்கு எதிரான மருந்து இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.
இது மிகவும் செலவு மிக்கதாக காணப்பட்டது.
இந்த நிலையில் பேராதனை பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள பாம்பு விஷ முறியடிப்பு மருந்து முக்கியத்துவம் வாய்ந்தது என்று, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Average Rating