அமெரிக்காவில் கார் மோதிய விபத்தில் இந்திய மாணவர் பலி…!!

Read Time:1 Minute, 50 Second

be95c743-bb63-49b9-9a5f-22ad925c004d_S_secvpfஅமெரிக்காவின் ஓக்லாஹோமா நகரில் பெண் ஒருவர் தாருமாறாக கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் கார் நுழைந்து ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரில் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர்.

ஓக்லாஹோமா நகரில் சாலை ஒன்றில் 25 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது காரை தாருமாறாக ஓட்டிச் சென்றுள்ளார். சுமார் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற அந்த கார், சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது மோதியது. காரை ஓட்டிய பெண்மணி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அதில் இந்தியாவை சேர்ந்த நிகிதா நகல் என்ற வாலிபரும் ஒருவர். மும்பையை சேர்ந்த நிகிதா நகல், ஓக்லாஹோமா பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ பயின்று வந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை அமெரிக்க போலீசார் கைது செய்து விசாரத்து வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த 8-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், 9 பேருக்கு அதிக அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேவையிலிருந்து நீக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி கஞ்சாவுடன் கைது…!!
Next post சார்ஜா கடலில் மூழ்கி சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் சாவு…!!