உ.பி.யில் தொடரும் கொடூரம்: 13 வயது சிறுமி சீரழித்து படுகொலை..!!
Read Time:1 Minute, 11 Second
வன்முறைக்கு பேர்போன உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 13 வயது தலித் சிறுமி கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள ரியோசா மாவட்டத்தை சேர்ந்த அந்த சிறுமி நேற்று மாலை ஆடு,மாடுகளுக்கு புல் பறித்துவர சென்றபோது அவளை பின்தொடர்ந்து சென்ற சோஹன் என்ற காமுகன், அந்த சிறுமியின் வாயைப்பொத்தி அவளை கற்பழித்ததோடு மட்டுமின்றி கொலையும் செய்துள்ளான்.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்துவந்த போலீசார், சிறுமியின் பிரேதத்தை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, குற்றவாளிமீது வழக்குப்பதிவு செய்து, ‘விசாரணை’ மட்டும் நடத்தி வருகின்றனர். எனினும், இன்று பிற்பகல்வரை அவன் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating