விண்வெளி மர்மப் பொருள் இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் விழலாம்…!!
விண்வெளியில் உள்ள மர்மப் பொருள் ஒன்று எதிர்வரும் நொவெம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் வீழலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘WT1190F ‘என பெயரிடப்பட்டுள்ள ஒன்று அல்லது இரண்டு மீட்டர்கள் நீளமுடைய குறித்த விண் மர்மப் பொருள் எவ்வாறு உருவானது என இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அவ்வாறான மர்மப் பொருட்கள் விண்வெளி கழிவுகள் என அடையாளப்படுத்தப்படுகின்றன.
குறித்த விண்வெளி திண்மப் பொருள் எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கை நேரப்படி முற்பகல் 11.50 அளவில் தெற்கு கடற்பரப்பில் 65 கிலோமீற்றர் தொலைவில் வீழலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக புகழ் பெற்ற நேச்சர் சஞ்சிகை மூலம் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரித்தானியாவின் டேலி மேல் உள்ளிட்ட ஊடகங்கள் இந்த செய்தியை பரவலாக பிரசுரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating