சிறுமியின் தலைமுடியை வெட்டியவருக்கு விளக்கமறியல்..!!
Read Time:1 Minute, 8 Second
பலங்கொடை- ரத்மலவின்ன பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து சிறுமியொருவரின் தலைமுடியை பலாத்காரமாக வெட்டிச் சென்ற நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி பலங்கொடை பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது.
இதன்போது வீட்டுக்குள் புகுந்த சந்தேகநபர் சிறுமியொருவரின் தலைமுடியை வெட்டிச் சென்றிருந்தமை தெரியவந்தது.
திருடும் நோக்கிலேயே சந்தேகநபர் வீட்டுக்குள் நுழைந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்திருந்தது. சிறுமி அவரைக் கண்ட தால் சந்தேகநபர் தலை முடியை வெட்டிச் சென்றிருந்தார்.
அவர் இராணுவத்தில் இருந்து தப்பிவந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating