ரயிலில் பிச்சை எடுக்க நாளை முதல் தடை…!!
Read Time:1 Minute, 9 Second
ரயில் நிலையங்களில் பிச்சையெடுப்பதற்கு நாளை முதல் தடைவிதிக்கப்படவுள்ளது.
ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற அதிகளவான முறைப்பாடுகளையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளிலிருந்து பிச்சைக்காரர்களை அகற்றும் நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ரயில் மற்றும் பேரூந்துகளில் பிச்சையெடுப்பது தடைசெய்யப்பட்டபோதும், கணிசமான அளவில் இந்நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதோடு இதுகுறித்து பயணிகள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating