விபத்தில் செல்லநாய் இறந்துப்போன அதே இடத்தில் பின்னர் உரிமையாளரும் பலியான சோகம்…!!
Read Time:1 Minute, 24 Second
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ராபர்ட் ஸ்ட்ரசெல்(55) என்பவரின் செல்லநாய் எல்லி சில தினங்களுக்கு முன் சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது. எல்லியின் உடல் கூழாக சிதைந்தும் போனது.
தனது செல்லநாய் எல்லியை ஏழு ஆண்டுகளாக பிள்ளைபோல ராபர்ட் பாசமாக வளர்த்து வந்தார். தனது மனைவி மற்றும் ஒரே மகளுடன் வசித்துவந்த ராபர்ட் எல்லியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல், மனைவி டெபோராவிடம் மிகுந்த வருத்தத்துடன் புலம்பியுள்ளார்.
இந்நிலையில், சில மணிநேரங்களுக்குப் பின் தனது நாய் உயிரிழந்த சாலைப்பகுதிக்கு மீண்டும் சென்ற ராபர்ட், எல்லியின் சிதைவுகளை சாலையிலிருந்து நீக்க முற்பட்டார். அப்போது, அவ்வழியே வந்த வாகனம் ஒன்று மோதியதில் ராபர்ட்டும் அதே இடத்தில் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் வசிப்பவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating