ஒலுவிலில் வீடொன்றுக்குள் நுழைந்த மூவரால் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகம்..!!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அத்துமிறி நுழைந்த மூவர் 32 வயதான குடும்ப பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குறித்த பெண் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் கணவர் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் ஒலுவில் 9 ஆம் பிரிவிலுள்ள தனது வீட் டில் தனது சகோதரனுடன் மூன்று பிள்ளைகளும் சம்பவதினம் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
நள்ளிரவு வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு நித்திரையிலிருந்து எழும்பி கதவை திறந்த போது உள்ளே நுழைந்த மூவர் சகோதரனை அறை ஒன்றிற்குள் கட்டிவைத்து விட்டு மூவரும் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதாகவும் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக விசார ணையையடுத்து குற்றவாளிகளை கைது செய்யவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
Average Rating