ஒலுவிலில் வீடொன்றுக்குள் நுழைந்த மூவரால் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகம்..!!

Read Time:2 Minute, 1 Second

downloadஅக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஒலுவில் பிர­தே­ச­த்தில் உள்ள வீடொன்­றிற்குள் கடந்த சனிக்­கி­ழமை நள்­ளி­ரவு அத்­து­மிறி நுழைந்த மூவர் 32 வய­தான குடும்ப பெண்­ணொ­ரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்தியதாக குறித்த பெண் அக்­க­ரைப்­பற்று பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ள­தாக அக்­கரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­தனர்.

பாதிக்­கப்­பட்ட குறித்த பெண்ணின் கணவர் சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கு முன் வெளி­நாடு சென்­றுள்ள நிலையில் ஒலுவில் 9 ஆம் பிரி­வி­லுள்ள தனது வீட் டில் தனது சகோ­த­ர­னுடன் மூன்று பிள்­ளை­களும் சம்­பவதினம் உறங்கிக் கொண்­டி­ருந்­துள்­ளனர்.

நள்­ளி­ரவு வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு நித்­தி­ரை­யி­லி­ருந்து எழும்பி கதவை திறந்த போது உள்ளே நுழைந்த மூவர் சகோ­த­ரனை அறை ஒன்­றிற்குள் கட்­டி­வைத்து விட்டு மூவரும் பெண்ணை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பொலிஸ் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்­பாக பொலிஸார் சம்­பவ இடத்­துக்கு சென்று விசா­ரணை மேற்­கொண்­ட­தா­கவும் பெண்ணை மருத்­துவ பரி­சோ­த­னைக்­காக வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக விசார ணையையடுத்து குற்றவாளிகளை கைது செய்யவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் இரவு இப்படி செய்தால் நன்மையே….!!
Next post மேகங்களுக்கு மேல் மிதக்கும் நகரம்: வேற்றுகிரகவாசிகளின் வருகையா…?