அதிக வலு கொண்ட மின் கம்பி முறிந்து விழுந்ததில் 3 பேர் பலி…!!
Read Time:50 Second
காலி- ஜின்தொட்ட பிரதேசத்தில் அதிக வலு கொண்ட மின் கம்பி முறிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜின்தொட்ட பள்ளிவாசலின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனொன்றின் மீது மின் கம்பு முறிந்து விழுந்தமையாலேயே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் காயமடைந்த மேலும் 3 பேர் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வேன் சாரதி பயிற்சி நிறுவனமொன்றுக்குரியதென தெரியவந்துள்ளது.
Average Rating