வவுனியா பத்தினியார் மகிழங்குளத்திலுள்ள இந்து மயானத்தில் பொலிசார் ஆயுதங்கள் தேடல்…!!
Read Time:1 Minute, 18 Second
வவுனியா பத்தினியார் மகிழங்குளத்திலுள்ள இந்து மயானத்தில் பொலிசார் இன்று தேடுதல் நடத்தி வருகின்றனர்.
மானிப்பாய் காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த தேடுதல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தடை செய்யப்பட்ட ஆயுதத் தொகுதியொன்று இந்தப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கண்டுபிடித்து குற்றவாளிகளையும் கைது செய்யுமாறும் வவுனியா நீதிம்ற நீதிபதியின் விசேட பணிப்புரையின் பேரிலேயே இந்த தேடுதல் தற்சமயம் நடத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், மானிப்பாய் பொலிசார் மற்றும் வவுனியா பொலிசாரோடு பத்தினியார் மகிழங்குள கிராம சேவகரும் மற்றும் சில அமைப்பைச் சேர்ந்தவர்களும் இந்த தேடுதலில் கலந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating