காவல்நிலையத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பலாத்காரம்; பொலிஸ் சார்ஜன்ட்க்கு சிறைத்தண்டனை…!!
வென்னப்புவ தோப்புவ பொலிஸ் காவலரணில் வைத்து 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயை பலவந்தமாக வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் அச்சமயம் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மீதான குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு கடும் வேலையுடன் கூடிய பத்து வருட சிறைத்தண்டனை வழங்கி சிலாபம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் அவருக்கு ஏழாயிரத்தி ஐநூறு ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனைகளுக்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இருபத்தையாயிரம் ரூபா நஷ்டயீடு வழங்குமாறும், இந்தத் தொகை மற்றும் அபராதத் தொகை என்பவற்றை செலுத்தத் தவறின் அதற்காக ஆறு மாதங்கள் மேலும் இலகு சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஸ்யால கொட்டுவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பொலிஸ் சார்ஜன்டான இவர் இச்சம்பவத்தையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டிருந்ததோடு அதன் பின்னர் பன்னல பிரதேசத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாத தினம் ஒன்றில் வென்னப்புவ பொலிஸ் பிரிவின் தோப்புவ பொலிஸ் காவலரணில் வைத்து அப்போது 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை பலவந்தமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவ்வழக்குத் தொடரப்பட்டிருந்தது. சம்பவதினம் இரவு குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்களுடன் சிலாபம் கொழும்பு வீதியின் வைக்கால் தோப்பு பாலத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நேரமே இவ்வாறு அங்கு வைத்து குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் குற்றவாளிக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதையடுத்து சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர அமல்ரணராஜாவினால் அவருக்கு இவ்வாறு தண் டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Average Rating