தியாகராயநகரில் ஏ.டி.எம். பணம் ரூ.10 லட்சம் மாயம்: ஊழியர்களிடம் விசாரணை…!!
Read Time:1 Minute, 1 Second
தியாகராயநகரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களுக்கு தனியார் நிறுவனத்தினர் பணம் நிரம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தனியார் நிறுவனத்தினர் ரூ.40 லட்சத்தை வங்கி ஏ.டி.எம்.மில் நிரப்ப காரில் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர்.
பாண்டிபஜார் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள வங்கி ஏ.டி.எம்.க்கு வந்த போது பெட்டியில் இருந்த ரூ.10 லட்சம் மாயமாகி இருந்தது. பணம் எப்படி திருடு போனது, அதை எடுத்தது யார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து பாண்டிபஜார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொண்டு சென்ற தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating