தாயின் கல்லறையை உணவு மேஜையாக மாற்றிய மகன்: பொதுமக்களுக்கும் அழைப்பு…!!
பிரான்சில் தனது தாயின் கல்லறையை உணவு மேஜையாக உருமாற்றி உணவருந்த பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் இளைஞர் ஒருவர்.
பிரன்சின் Ile de France எனும் பகுதியில் அமைந்துள்ள Mons en Montois என்ற கிராமத்தில் குடியிருந்து வருபவர் 33 வயதான Natlacen.
இவர் தமது தாயின் கல்லறையை வெள்ளை கற்களால் உணவு மேஜையாக வடிவமைத்து அதில் உணவருந்த பொதுமக்களையும் அழைப்பு விடுத்துள்ளார்.
10 பேர் அமர்ந்து உணவருந்தி பேசிக்கொண்டிருக்கும் வகையில் அவர் அந்த கல்லறையை வடிவமைத்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருமுறை விடுமுறையை கழிக்க சென்ற இவர் அங்கு நடைபெற்ற ஒரு விநோத சடங்கு இவரை வெகுவாக ஈர்த்துள்ளதாக கூறும் Natlacen,
மரணமடைந்தவரை புதைத்த பின்னர் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அந்த கல்லறையை வட்டமிட்டிருந்து 3 நாட்கள் உணவருந்தவும் பேசி சிரித்து மகிழ்ச்சியாகவும் இருந்துள்ளனர்.
இதையே தமது தாயின் கல்லறையிலும் நடைபெற வேண்டும் என்று முடிவு செய்த அவர், நாடு திரும்பியதும் நடைமுறைப்படுத்தவும் செய்துள்ளார்.
கல்லறையை உணவு மேஜையாக மாற்றியதில் அப்பகுதி கிராம மக்களுக்கு உடன்பாடு இல்லை என்றபோது, வெகுசிலர் அதில் அமர்ந்து இருப்பதை காண நேர்ந்ததுண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating