சென்னை அண்ணாசாலையில் கழிவுநீர் லாரி கவிழ்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்…!!
Read Time:1 Minute, 10 Second
ராயப்பேட்டை பகுதியில் இருந்து கழிவுநீர் ஏற்றிய மாநகராட்சி லாரி இன்று அதிகாலை 6 மணியளவில் அண்ணாசாலை வழியாக சென்றது.
வாலாஜா சாலை சந்திப்பில் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரம் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் சுப்பிரமணியன் உடன் இருந்த மோகன்தாஸ், சபிகோல், லோடிஷ் பஷ்புல் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 5 பேருக்கும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
லாரி கவிழ்ந்த போது அருகில் மற்ற வாகனங்கள் செல்லாததால் பெரிய விபத்து ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Average Rating