டக்லஸ் தேவாநந்தாவுக்கு எதிராக புகார்..!!
Read Time:58 Second
முன்னால் அமைச்சர் டக்லஸ் தேவாநந்தாவுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் இன்று தீவிர மோசடி மற்றும் ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புகார் ஒன்றை சமர்ப்பித்தார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பியதற்காக செலுத்தவேண்டிய 150 லட்சம் பணத்தை செழுத்தாத காரணத்தினால் குறித்த புகாரை சமர்ப்பித்திருந்தார்.
கடந்த 2000 தொடக்கம் 2005 வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Average Rating